Saturday, March 6, 2021

ஒன்பது கிரக சம்பந்தமும், கிரக அஸ்தாங்கதமும், கிரக யுத்தமும், கொரோனாவும்.

 2019 - மார்ச்7-5 மணி 52 நிமிடம். சனி தனுசில் இருந்தபோது ‌‍‍‍‍‍ ‌கேதுப் பிரவேசம்.‌ தனுசில் இரு கிரகங்கள். சனி கேதுவின் பிடியில் வந்தார்.

 2019 - மார்ச் ‌‌‌‌29 - 22.58 க்கு குரு தனுசுக்கு வருகிறார். தனுசில் மூன்று கிரகஙகள்.உலகைச் சீர் படுத்தும் திட்டம் இப்போது தான் ஆரம்பம். நான்கு வருஷாதி கிரகங்கள். சனி தர்மத்தின்படி இயக்குபவர். குரு நன்மையை எப்போதும் வலியுறுத்தி நடத்துபவர்.‌ கேது அறிவுப் பூர்வமாக உலகைக் கொண்டு செல்பவர். ராகு மிதுனத்தில் இருந்து மூவரையும் பார்க்கிறார். பார்க்கப் படுகிறார்.கேது காட்டிய வழியில் ராகு நடத்துவார். உலகத்தைத் திருத்துவதில் இவருக்கே முக்கியப் பங்கு.

இயற்கை உத்பாதங்களான பூகம்பம், எரிமலை, சுனாமி, பெரு வெள்ளம், அதி விருஷ்டி என்று சொல்லக் கூடிய பெரு மழை, இடி, மின்னல், புயல், அனா விருஷ்டி என்று சொல்லக் கூடிய கடும் பஞ்சம், வறட்சி, மழையின்மை, தீ விபத்து போன்றவைகளை ராகுவே நடத்துவார். ராகு விபத்துக் காரகன். ஆகாய விமானம், கப்பல், ரயில், பஸ் மற்றும் அனைத்து விபத்துகளும் ராகுவாலேயே!
மூவரும் தனுசில் என்பதால் தான் மகத்துவமே! தற்போது குரு மூலத்திரிகோணம். குரு சண்டாள யோகம்.

      2019 - ஏப்ரல் 22 - 22 . 07 க்கு குரு வக்ரத்தில் மீண்டும் விருச்சிகம் வந்து விட்டார். வக்ரத்தில் கிரகம் சேஷ்டா பலம் பெறும்.
      2019 - நவம்பர் 5 - 5.55 க்கு குரு மீண்டும் தனுசுப் பிரவேசம்.
      2019 - நவம்பர் 21-12.20 மணி வாக்கில்  சுக்கிரன் தனுசுப் பிரவேசம்.
      2019 - டிசம்பர் 16 - 15.35 க்கு சூரியன் தனுசுப் பிரவேசம்.
      2019 - டிசம்பர் 25 - 15.50 க்கு புதன் தனுசுப் பிரவேசம். 
      2019 - டிசம்பர் 25 - 16.42 க்கு சந்திரன் தனுசுப் பிரவேசம். சுக்கிரன் மகரத்துக்குப் போய்விட்டார்.

இப்போது தனுசில் 6 கிரகங்கள்.எப்போதும் உலகத்துக்கு டிசம்பர் 24 ம், 26 ம் மோசமான நாட்கள் . 24 ஐ விட 26 கடுமையானது. பின்னோக்கிப் பார்த்தால் இது புரியும். இந்த நாள் தான் கொரோனாவிற்கு அஸ்திவாரம் போடப்பட்ட நாள்.
சந்திரன், புதன், குரு அஸ்தாங்கதம். இப்போது 7 கிரக சம்பந்தம்.
எட்டாவதாக செவ்வாய் துலாத்தில் நீச குரு சாரம் பெற்று மகர சுக்கிரனை 9 வது கிரகமாகக் கொண்டு பார்க்கிறார். இப்படி 9 கிரகங்களுக்குள் ஏதோ ஒரு சம்பந்தம் ஏற்படுகிறது. அதுவும் தனுசில். அது தான் முக்கியம். உலக நன்மைக்கு இவைகளெல்லாம் தனுசில் தான் ஏற்படும். ஏற்பட வேண்டும். ஏனெனில் தனுசு கால புருஷனுடைய தர்ம ஸ்தானம். நீதியை நிலை நிறுத்துமிடம். உலகை ஒழுங்கு படுத்தும் இடம். தனுசுக்கு அதிபதியான குரு பகவான் தான் தர்மஸ்தானாதிபதி. காரகனும் அவரே!
 
2019 - டிசம்பர் 25 - 21.39 க்கு செவ்வாய் விருச்சிகத்துக்கு வருகிறார். சனி சாரம் அடைந்து 8 ம் பார்வையால் செவ்வாய் ராகுவைப் பார்க்கிறார். தனுசில் கிரக யுத்தம் ஏதுமில்லை. சந்திரனுக்கு 5*க்குள் இருக்கும் கிரகங்கள் சமாகம பலம் பெறும்.
ஆனால் சந்திரன் ராகுவுடன் அல்லது கேதுவுடன் ராசியில் இருந்தாலே போதும். கிரகண தோஷம் உண்டாகி விடும். ராகுவை விட கேதுவுடன் கடுமை.
சூரியனும், ராகுவுடனும், கேதுவுடனும் கிரகண தோஷம் அடைவார். கேதுவை விட ராகுவுடன் கடுமை.
சூரியனுடன் அஸ்தாங்கதத்தில் கிரகங்கள் எரிந்து தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும். அது சூரியக் குளியல். மற்ற கிரகங்களால் சேர்க்கையினாலும், பார்வையினாலும், பரிவர்த்தனையினாலும் ஏற்பட்ட காரகத்துவ, ஆதிபத்திய இழப்பு சூரியனுடன் ஏற்பட்ட அஸ்தாங்கதத்தால் புதுப் பொலிவு பெற்றுச் சீர் பெறும். உபாகர்மமும், வேத அத்யயனங்களும், குரு, செவ்வாய், புதன் ஆகியோர் அதிலிருந்து மீண்ட பிறகே! குரு ரிக் வேதம். செவ்வாய் சாம வேதம் இப்படி.

சூரியன், சந்திரன், புதன், குரு நால்வரும் கேது சாரம். கேது உலகைச் சீர் படுத்தும் வழி காட்டுபவர்.
கேது, சுக்ர சாரம். சுக்ரன், சந்திர சாரம். சந்திரன், கேது சாரம். பகை கிரக சாரப் பரிவர்த்தனை.புதன், சந்திரன், குரு அஸ்தாங்கதம். உலகம் பகையாலும், குழப்பத்தாலும் தவிக்கும். அனைத்தும் முழுச் சுபன் ஆன குருவின் வீட்டில், கேதுவை மையமாகக் கொண்டு. கேது நைஸர்கிக (இயற்கை) பலத்தில் முதல் இடம். அசைந்து கொடுக்காதவர். மஹாக் குரூரர். ராகு அடுத்த இடத்தில் இருப்பார். மாற்றத்தைத் தந்து கொண்டே இருப்பார். தர்மம் தவறும் போது நிலை மாற்றம் கண்டிப்பாக  நடந்தே தீரும்."Even the king will tumble down." அவர் பார்வை  யால் தான் உலகம் உருப்பட ஆரம்பிக்கிறது. உலகத்துக்கு மொத்தப் பொறுப்பும்  ராகுவுக்கே ! மற்றவர்கள் துணை மட்டுமே.

2019 - டிசம்பர் 27 - 23.46 க்கு சந்திரன் மகரப் பிரவேசம். சந்திரனுக்கு 12 ல் 5 கிரகங்கள். பலம் இழந்து விடுவார்கள்.முழு மறைவில் இருப்பார்கள். 5* க்குள் இருப்பவர்கள் சமாகம பலம் பெற்று விரயம் புரிவார்கள். உலகத்துக்குப் பல வகையில் இழப்புகள் ஆரம்பம்.

      சனி - உத்திராடம் 1 - சூரிய சாரம். பகை.
      சூரியன் - 11* 33' மூலம் 4 - கேது சாரம் பகை.
       குரு - 11* 33' மூலம் 4 - கேது சாரம் பகை.

குரு கடும் அஸ்தாங்கதம். தன் பலம் இழந்தார். நன்மைகளுக்குப் பஞ்சம் ஏற்படும். ஏழை, எளியோர் கடும்  இன்னல்களுக்கு ஆளாவார்கள்.

2020 - ஜனவரி 10 - 3.49 க்கு சந்திரனும்  ராகுவும் மிதுனத்தில் 13* 38' ல் ராகு சாரம். கடுமையான கிரகண தோஷம். உடற்பிணிகள் உலக மக்களை வாட்டும். சளி, இருமல், தும்மல் எல்லாம் ஆரம்பம்.

மறுபடியும் தனுசில்: சூரியன், புதன், குரு, சனி, கேது ஐவர். ராகுவையும், சந்திரனையும் செவ்வாய் 8 ம் பார்வையால் பார்க்கிறார். செவ்வாய் சனி சாரம். யுத்த பயம் ஏற்படும். யுத்த முஸ்தீபுகள் தொடங்கும்.
சூரியன், சுக்ர சாரம். சுக்ரன், செவ்வாய் சாரம். செவ்வாய், சனி  சாரம். சனி, சூரிய சாரம். இரண்டாவது தடவையாகக் கடும் பகை கிரகங்கள் சாரப் பரிவர்த்தனை. சுக்கிரன், செவ்வாய் சாரமானதால் 9 கிரக சம்பந்தம். கலவரங்கள், குழப்பங்கள், அதிருப்தி, இழுபறி நீடிக்கும்.

 2020 - ஜனவரி 15 - 2.15 க்கு சூரியன் மகரப் பிரவேசம். உத்திராடம் 2, சுய சாரம், பகை. யுத்த அபாயம் மேலோங்கும். தனுசில் 3 கிரகம், மகரத்தில் 2, செவ்வாய் கும்பத்தில், சனி சாரம். சுக்கிரனைப் பார்ப்பார். 7 கிரக சம்பந்தம். இழுபறியாய் உலகம் இயங்கும்.
 
2020 - ஜனவரி 24 - 10.50 க்கு சனி மகர ப்ரவேசம். சனி உத்திராடம் 2 சூரிய சாரம். அஸ்தாங்கதம். பல உயிரிழப்புக்கள் ஏற்பட ஆரம்பிக்கும்.

2020 - பிப்ரவரி 8 - 4.01 க்கு செவ்வாய் தனுசுப் பிரவேசம். மூலம்1- கேது சாரம். மறுபடியும் தனுசில் 3 கிரகங்கள். சுக்கிரன் உச்சம். 7 கிரக சம்பந்தம். குளறுபடிகளும், குழப்பங்களும் அதிகமாகும்.

2020 - மார்ச்14 - 11.59 க்கு( உத்தேசம்). செவ்வாய்,
குரு, கேது மூவரும் தனுசில். பணத்தட்டுப்பாடும், கலகமும் ஏற்படும். பிடிவாதங்கள் அதிகமாகும்.

2020 - மார்ச் 18 - 21.00 க்கு, கிரக யுத்தம்.  யௌத்தம்.
செவ்வாய்  27*24' உத்திராடம் 1- நட்பு குரு. 28*24' உத்திராடம் 1-ஆட்சி இங்கே செவ்வாய் தோற்பார். கலகமும், முரட்டுத் தனமும் மேலோங்கும்.

2020 - மார்ச் 20 - 17.03 க்கு, கிரக யுத்தம். யௌத்தம் செவ்வாய் - 28*41'- உத்திராடம் 1  குரு. - 28*41' -உத்திராடம் 1  இரண்டும் ஒரே பாகை, ஒரே நிமிஷம் (கலை). கடுமையான கிரக யுத்தம். அதாவது யௌத்தம். குருவுக்கும் பாதிப்பு உண்டு. பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும். யுத்த ஏற்பாடுகள் தீவிரம்.

 2020 - மார்ச் 22 - 13.43 வரை அதே தனுசிலேயே கிரக யுத்தம். அம்சுமர்த்தனம்.
செவ்வாய் - 29*58'- உத்திராடம் 1 . நட்பு.
குரு. - 28*.57' - உத்திராடம் 1.ஆட்சி. 
செவ்வாய் ஜெயிப்பார். நனமைகளுக்குப் பஞ்சம். நல்லவர்கள் சொல்வது எடுபடாது. பணத்திற்கும் மதிப்பிருக்காது.

2020 - மார்ச் 27 - 9.40 க்கு, கிரக யுத்தம். பேதம். செவ்வாய் - மகரம் - 3*19' - உத்திராடம் 2 -உச்சம்.
சனி.- மகரம் - 6*13' -உத்திராடம்  3- ஆட்சி. 
செவ்வாய் தோற்பார். கடுமையான  கலவரம், கலகம் இவைகள் ஏற்பட்டு முடிவுக்கு வரும்.          
 
2020 - மார்ச் 29 - 16.56 க்கு, கிரக யுத்தம் உல்லேகம்.
செவ்வாய் - மகரம் - 4*56'   உத்திராடம் 3 - உச்சம்
குரு. - தனுசு - 29*56' உத்திராடம் 1 - ஆட்சி 
செவ்வாய் ஜெயிப்பார். யுத்த பயம் உண்டு. யுத்த வியூகங்கள் வகுக்கப்படும்.
 
2020 - மார்ச் 30 - 4.50 க்கு, குரு மகர ப்ரவேசம். நீசம். ஆயினும் நீச பங்கம். ஆகவே ராஜ யோகம். கஷ்டத்திலும் நிதி உதவிகள் கிடைக்கும்.
 
2020 - மார்ச் 30 - 9.36 க்கு, கிரக யுத்தம். அம்சுமர்த்தனம்.
செவ்வாய் - மகரம் - 5*24' - உத்திராடம் 3 - உச்சம்.
சனி. - மகரம் - 6*25' - உத்திராடம் 3 - ஆட்சி.
செவ்வாய் ஜெயிப்பார். உயிரிழப்புக்கள் அதிகமாகும்.

2020 - மார்ச் 31- 23.36 க்கு, கிரக யுத்தம். யௌத்தம்.
செவ்வாய் - மகரம் - 6*31'- உத்திராடம் 3 -உச்சம்.
சனி. - மகரம் - 6*31'- உத்திராடம் 3 -ஆட்சி.
செவ்வாய் ஜெயிப்பார். உயிரிழப்புக்கள் மிக அதிகம் ஏற்படும். இது 2020 - ஏப்ரல் 2 வரை.
       
2020 - மே16 - 22.38 க்கு, குரு வக்ரமும் நீசமும்.
ஆகவே உச்ச பலன். பணப் புழக்கம் உண்டாகும்.
நன்மைகளும் நடக்க ஆரம்பிக்கும்.
       
2020 - ஜூன் 8 - 3.35 க்கு, கிரக யுத்தம் இல்லை. ஆனால் சனியும் குருவும் வக்கிரத்தில், பலம்.
உலகம் பயங்கரத்திலிருந்து விடுபட்டது. ஆனால் பாதிப்புகள் தொடர்ந்தன.
        
2020 - ஜூன் 30 - 5.10க்கு, குரு தனுசுக்கே வந்து விடுகிறார். இன்னும் வக்ரம். கேது தனுசில் இருப்ப
தால் குரு சண்டாள யோகம். குருவின் சுப பலன்கள் உலகத்துக்குக் கிடைக்கும். பணத் தட்டுப்பாடு ஓரளவு நீங்கும். 
       
2020 - செப்டம்பர் 15 - 6.57 க்கு, குரு வக்ரம் முடிந்தது. அப்போது குரு -  தனுசு - 23*17' பூராடம் 3 - ஆட்சி. சனி இப்போது வரை வக்கிரமாகி,
        
2020 - செப்டம்பர் 30 - 17.55 க்கு, சனி வக்ர நிவர்த்தி.
சனி - மகரம் - 1*12' - உத்திராடம் 2 - ஆட்சி. பகை.
உயிரிழப்புக்கள் தொடரும். மறுபடியும் கிரக யுத்தம் ஆரம்பித்து விட்டது.
    
2020 - டிசம்பர் 7 - 20.29 க்கு, குரு- சனி கிரக யுத்தம், அம்சுமர்த்தனம்.
குரு - மகரம் - 3*21' - உத்திராடம் 2 - நீசம் .
சனி - மகரம் - 4*53' - உத்திராடம் 3 - ஆட்சி. பகை.
மிகவும் கொடுமையான காலம்.
       
2020 - டிசம்பர் -12 - 23.36 க்கு, குரு - சனி, கிரகயுத்தம். யௌத்தம்.
குரு - மகரம் - 4*23' - உத்திராடம் 3 - நீசம்.
சனி - மகரம் - 5*23' - உத்திராடம் 3 - ஆட்சி. பகை.
உலகம் வேறு மாதிரியான கொடுமைகளைச் சந்திக்கும்.
       
இதெல்லாம் இப்படியிருக்க விருச்சிகத்தில் வேறு மாதிரியான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. அங்கே கேது உச்சன்.
       
2020--நவம்பர்--15--11.59 க்கு, சந்திரன் நீசனாக விருச்சிகத்துக்கு வருகிறார். சந்திரன் உச்ச சம்பந்தம் பெற்றதால் நீசம் பங்கமாகி ராஜயோகம் அடைவார்.ஆனால் சந்திரன் அஸ்தாங்கதம். இப்போது சூரியனும் விருச்சிகத்தில் நுழைகிறார்.
       
2020--நவம்பர் 16--7.02 க்கு, வருகை. முன்பே கேதுவால் சந்திரனுக்குக் கிரகண தோஷம். இப்போது சூரியனுக்கும். அஸ்தாங்கதம் தொடர்கிறது. மிகக் கடுமை.
        
2020-- நவம்பர்--17--12.04( உத்தேசம்) சந்திரன் தனுசுக்குப் போய் விடுகிறார்.

2020-- நவம்பர்--28--7.09 க்கு, புதனும் விருச்சிகத்தில் நுழைகிறார்.
      
2020--டிசம்பர் 11--5.23 க்கு, சுக்கிரனும் வருகிறார்.
விருச்சிகத்தில் தற்போது கேது, சூரியன், சுக்கிரன்,
புதன். கிரகக் கூட்டம். கடும் பகை. அடுத்த நாள் சந்திரனும் வருகிறார். விருச்சிகத்தில் ஐவர். ராகுவும் பார்க்கிறார். உலகம்  அல்லோல கல்லோலகத்தில். இரு நாளில் சந்திரன் தனுசுப்  பிரவேசம்.
        
2020-- டிசம்பர் 15--21.39 க்கு சூரியன் தனுசு.
        
2020-- டிசம்பர் 17--11.42 க்கு புதன் தனுசு.
சந்திரன் மகரத்துக்குப் போய் விட்டார்.
       
 2021-- ஜனவரி 4--5.09 க்கு சுக்கிரன் தனுசு.
இப்போது தனுசில் சூரியன், புதன், சுக்கிரன் மூவர்.
அதிலும் புதன் அஸ்தமனம்.
         
2021-- ஜனவரி 5--3.59 க்கு புதன் மகரம்.
அஸ்தமனம். இப்போது மகரத்தில் மூவர். புதன், சனி, குரு. 
         
2020-- டிசம்பர்12--23.36 க்கு குரு, சனி கிரக யுத்தம். நாம் அவர்களை யௌத்தத்தில் விட்டு
வந்தோம். அது தொடர்ந்து நடந்து இப்போது அம்சு மர்த்தனமாக மாறியிருக்கிறது.
        
2021-- ஜனவரி 10-- 8.42 க்கு புதனும், சனியும் மகரத்தில் கிரக யுத்தம். யௌத்தம். அதோடு புதன், சனி அஸ்தமனம். குரு, சந்திரன் நீசம். உலகத்துக்குப் பொல்லாத நேரம். 
         
2021--ஜனவரி11--22.47க்கு குரு--புதன் கிரக யுத்தம். யௌத்தம்.
புதன்-- மகரம்--11*07'-- திருவோணம்1.-- அஸ்தமனம்.
குரு   -- மகரம்--11*07'-- திருவோணம்1-- நீசம் படிப்பிற்குரிய அனைத்து இடங்களுக்கும் தொல்லை.
         
2021 -- பிப்ரவரி6--12.48 க்கு சுக்கிரன் சனி கிரக 
யுத்தம்.  யௌத்தம்.
சுக்கிரன்-- மகரம்--11*42'--திருவோணம்1
சனி.         --மகரம் --11*45'--திருவோணம்1
சினிமா, நாடகம், சங்கீதம், டிவி இப்படி அனைத்தும் உபயோகமற்றுப் போகும்.
       
2021--பிப்ரவரி11--20.12க்கு சுக்கிரன் குரு கிரக
யுத்தம். யௌத்தம்.
குரு-- மகரம்--18*25'--திருவோணம்3--அஸ்தமனம், நீசம்.
சுக்கிரன்--மகரம்--18*25'--திருவோணம்3.
மத சம்பந்தம், பணம், கேளிக்கைகள், உல்லாசம் எல்லாம் வீணாகும்.
       
2021--பிப்ரவரி15--2.49க்கு புதன் குரு கிரக யுத்தம். புதன் வக்ரம். யௌத்தம்.
புதன்-- மகரம்--19*12'--திருவோணம்3 அஸ்தமனம்.
குரு.  --மகரம்-- 19*12'--திருவோணம்3 நீசம்.
கல்விக்குச் சோதனை.
        
2021--மார்ச்5--8.28க்கு புதன் குரு கிரக யுத்தம். யௌத்தம்.
புதன்--மகரம்--23*23' --அவிட்டம்1--சமம்.
குரு.  --மகரம்--23*23'-- அவிட்டம்1--நீசம்.
அதே முந்தைய பலன்.
       
2021--மார்ச்26--11.35க்கு சுக்கிரன் அஸ்தாங்கதம்
சூரியன்--மீனம்--11*39'--உத்திரட்டாதி3--பகை சாரம்.
சுக்கிரன்--மீனம்--11*39'--உத்திரட்டாதி3--உச்சம். அஸ்தாங்கதம். அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மிகத் தொல்லை.
       
2021--ஏப்ரல்6--2.03க்கு குரு மகரத்திலிருந்து கும்பத்துக்குப் பிரவேசம். இத்துடன் கொரோனாவின் தாக்கமும், பாதிப்பும் பெரும் அளவில் குறைந்து விடும் என்று எதிர் பார்க்கலாம்.
 கிரக யுத்தங்களில் குரு, செவ்வாயுடன் 4 தடவைகளும், புதனுடன்3 தடவைகளும், சனியுடன்2 தடவைகளும், சுக்கிரனுடன்1 தடவையும் வித்தியாசமான கிரக யுத்தம் செய்திருக்கிறார். செவ்வாய், குருவுடன் 4 தடவைகளும், சனியுடன் 3 தடவை களும் யுத்தம். சனி, செவ்வாயுடன் 3 தடவைகளும், குருவுடன் 2 தடவைகளும் சுக்கிரனுடன் 1ம் யுத்தம். புதன், குருவுடன் 3 தடவைகள் யுத்தம். சுக்கிரன் குருவுடன் ஒன்றும், சனியுடன் ஒன்றும் யுத்தம்.
       
அஸ்தாங்கதம் அளவுக்கு மீறி நடந்தேறியிருக்கிறது.கிரக வக்கிரங்களும் நடந்தேறின. கிரக உச்சங்களும், நீச பங்க ராஜ யோகங்களும், சமாகமம், அர்க்களம், வக்கிர நீசம் உச்சமாகுதலும் நடந்தன. வேதைகளும் இருந்திருக்கும்.
 உலகத்தைப் புரட்டிப் போட்டு விட்ட இது, மகா விசித்திரமானதும், வித்தியாசமுமானதும், அசாதாரணமானதுமான ஓர் ஆச்சரியமான நிகழ்வு தான்.
 
யூ டியூப்பில் ஒரு புண்ணியவான் 536 வருடங்களுக்கு ஒரு முறை வரும் 6 கிரகச்சேர்க்கை தனுசில் வரப்போகிறது என்பதை வருவதற்குச் சில காலம் முன்பே சொல்லியிருந்தார். மேலும் அந்தச் சமயத்தில் ஏதாவது கோயிலுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தார். நான் பார்த்தபோது அவர் சொன்னது உண்மை தான் என்று தெரிந்தது. 6 கிரகச் சேர்க்கை என்று மட்டும் கூறி இருந்தார். 7 வது கிரகமாக ராகுவின் பார்வையும் இருந்தது. 8,9 வது கிரகங்களின் சாரமும் இருந்தது.
        
யோசித்ததில் ஒரு கடுமையான  உலகப்போர் ஏற்படலாமென்றும் அது முற்றிலும் எதிர் பார்க்காத வண்ணம் இருக்குமென்றும் எண்ணினேன். ஆனால் நடந்ததோ முற்றிலும் வேறு. ஒரு வேடிக்கையான விஷயமும் நடந்தது. 2020 புது வருடப் பிறப்பில் டிவி யில் ஜோதிடத் திலகங்கள் தோன்றி, ஜனங்கள் எல்லாம் இந்திரன், சந்திரன்கள் தான் இனி என்றார்கள். இனிமேல் பாலாறும், தேனாறும் தான் பாயும் என்றார்கள். எனக்கு ஏனோ கான்யூட் ராஜாவின் சபையோர் ஞாபகம் வந்தனர். அதற்குரிய சம்பாவனையை அவர்களுக்குக் கொரோனா பிற்பாடு கொடுத்திருந்தது. ஜோதிடத்தின் அடிப்படையைக் கருத்தில் கொள்ளாமலும், தம் எல்லையை உணராமலும் நடந்து கொண்ட  விஷயம் அது.
         
அலட்டிக் கொள்ளாத யூ டியூப் புண்ணியவான் தான் அருமையான  ஜோசியர். உலக  உபகாரி. மேலானவர். அவர் வாழ்க நீடூழி! நல்ல வழியும் காட்டியிருந்தார். நண்பர்களுடன் 12 நாட்களில் 45 கோயில்கள் தரிசனம் கிடைத்தது.
        
வீட்டு வாசலில் இருக்கும் வேம்பின் இலைக் கஷாயம் கொரோனாவை அண்ட  விடாமல் செய்து இருந்தது. வேம்பின் அருமை சொல்லவும் பெரிதே!
        
ஜனங்களுக்கு ஒரு விநோதமான மனோபாவம் இருந்தது. எல்லாத் தீர்வையும் டிவியில் எதிர் பார்த்தனர். எளிமையானவைகள் எல்லாம் பயன் இல்லாதவைகளாகத் தெரிந்தன. இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்கப் போய்க் கடைசி வரை.
பாவம். விதி வழி மதி.
           
கொரோனாவின் தாக்கமும், பலன்களும் !

1) 145 வருடங்கள் ஆகும் என்று கருதப்பட்ட ஓஸோன் ஓட்டை மூன்றே மாதத்தில் மூடியதாம் !
2) உலகத்திலேயே அதிகமானவர்கள் வரும் வாடிகன் மூடப்பட்டது.
3) மக்கா, மதீனா மூடப்பட்டது. உள்ளூர் மசூதிகளும்
4) திருப்பதி, கேதார்நாத், பத்ரிநாத், இன்னும் அனைத்துக் கோயில்களும், காசியிலிருந்து கன்யாகுமரி வரை மூடப்பட்டிருந்தன.
5) அனைத்து மருத்துவ மனைகளும் மூடப்பட்டன.
கொரோனாவுக்கானவைகள் மட்டும் திறந்திருந்தன. மற்ற வியாதிகளுக்கான  அறுவை சிகிச்சை, மற்ற மருத்துவ சிகிச்சைகள் நிறுத்தப் பட்டன. கொரோனாவுக்கு வைத்தியம் பார்த்தவர்கள், மருத்துவர்களும், செவிலியர்களும் கொஞ்சம் பேர் இறந்தே விட்டிருந்தனர்.
6) பள்ளிகள், கல்லூரிகள், கலாசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. மாணவர்கள் வீட்டிலிருந்தே படித்தனர். சில வகுப்புக்கள் தேர்வு எழுதாமலேயே பாஸ் ஆகின.
7) அனைத்து ஹோட்டல்களும் கிட்டத்தட்ட மூடப்பட்டிருந்தன. டீக்கடைகளும் கூட.
8) பார்கள் மூடப்பட்டன. கை நடுங்குபவர்களும், குடிக்கவில்லை யென்றால் இறந்து விடுவார்கள் என்று கருதப்பட்டவர்களும் அப்படியே இருந்தார்கள். ஒன்றும் ஆகவில்லை.
9) பெரிய மால்களிலிருந்து சிறு பெட்டிக்கடை வரை மூடப்பட்டது. பாங்குகள் ஒழுங்கு படுத்தப்பட்டன. சினிமாத் தியேட்டர்கள் மூடப்பட்டன
10) தொழிற் சாலைகள் மூடப்பட்டன. ஆபீசுகள் மூடப்பட்டு வீட்டிலிருந்தே வேலை.
11) ஆகாய விமானம், கப்பல், ரயில், பஸ் அனைத்து வகைப் போக்குவரத்தும் ஆட்டம் கண்டன.
12) காய்கறிகளும், பழங்களும், மளிகைப்  பொருட்களும் தெருவிற்கே விற்பனைக்கு வந்தன.
13) அயல் மாநிலங்களிலிருந்தும் வேலைக்கு வந்திருந்தவர்கள் லட்சக் கணக்கானவர்கள், ஆயிரக்கணக்கான  கிலோ மீட்டர்கள் நடந்தே வீட்டை அடைந்தனர்.
14) ஜனங்கள் மூக்கையும், வாயையும் மூடி வைத்திருந்தனர். அவர்கள் வீட்டிலேயே இருந்ததனால் காட்டு மிருகங்கள் சாலைகளில் திரிந்தன.
15) நாடுகளின் பொருளாதாரம் அடி வாங்கியிருந்  தது. என்ன  செய்வது என்று தெரியாமல் நாடுகள்திணறின. கொத்துக் கொத்தாக ஜனங்கள் மடிந்தனர். உலகம் பீதியில் உறைந்தது. பணமும், பதவியும், அதிகாரமும், படாடோபமும் எங்கே போயின என்று தெரியவில்லை. ஒவ்வொருவரும்அடுத்தவரைக் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தனர்.
16) இது என்ன என்று யாருக்கும் தெரியவில்லை.எங்கிருந்து வந்தது என்றும் தெரியவில்லை. எப்போது ஆரம்பித்தது என்றும் புரியவில்லை. ஒழிக்கமுடியவில்லை. ஓரளவுக்குத் தடுத்தும் நிறுத்தப் பட்டது. இன்ன வகை ரத்தத்திற்குக் கடுமை யென்றும், சைவர்களுக்கு வராது என்றும் சொல்லப்பட்து. கஷாயங்களும், மூலிகைகளும் கொரோனாவைத் தடுத்தன.
17) உலக  அரங்கில் யுத்த பயம் ஏற்பட்டது. இதோ உலகைப் பிடிக்கிறேன் என்று கிளம்பியவர்கள் உள் நாட்டிலேயே ஒடுங்கியிருந்தனர்.
18) ஆயுத விற்பனை அமோகம். புதிது புதிதான ஆயுதங்களை அறிய வாய்ப்பு ஏற்பட்டது. தீபாவ ளிக்கு ஏராளமான  பட்டாசுகள் வித  விதமானவைகள் வாங்கிக் குவித்தும் மழையால் வெடிக்க முடியாமல் போனது போல் இருந்தது உலகம்.
19) புகை அறவே நின்றிருந்ததால், உலகமே குளிர்ந்து ஏராள மழை. வெள்ளம். பனி உருகும் வேகம் குறைந்தது. இன்னும் ஏராளமான மாற்றங்கள். எல்லாம் தலை கீழானவைகள். இதுவரை உலகம் கண்டிராதவைகள்.
20) ஒரு அழுக்கான  வீட்டை ஒட்டடை அடித்துக் கூட்டிப் பெருக்கிக் கழுவித் துடைத்தது போல இருந்தது உலகம்.
21) குப்பைகள் அகற்றப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டு, தான் தோன்றித் தனமானவைகள் ஒழிக்கப்பட்டுக்கட்டுக் கோப்புக்குள் கொண்டு வரப்பட்டு, ஓரளவுக்கு உலகம் சீரடைந்தது. ஓரளவு தான். தேவை என்றால் வேறு முறையில், வேறு வகையில், வேறு வடிவத்தில், யாரும் அறியாதபடியும், தடுக்க முடியாதபடியும்.!!!

        நினைவிலும் கொள்க.!
                   அன்புடன்
                     சக்தி ஸ்ரீ.
                  B.E; M.A;(Astro).

அடுத்தது: கிரக  யுத்தம், அஸ்தாங்கதம், கிரக வக்ரம், அதி வக்ரம், அதிசாரம்.

Saturday, January 23, 2021

பாவாத் பாவம் : 2ம் பாவம்

பாவாத் பாவம் :  2ம் பாவம் 

 இரண்டுக்கு உரிய சுக்கிரன் மறு இரண்டில் இருக்கிறார். அதாவது மிதுனத்தில். பெரும்பாலும் அவருடன் சூரியனும் புதனும் சேர்ந்தே இருப்பார்கள். சூரியன் பகை. புதன் நண்பர். சூரியனுடன் அஸ்தாங்கதம் ஏற்பட்டால் சுக்கிரன் பலம் இழந்து விடுவார். புதனும் அப்படியே. பலக்குறைவால் மாரகம் குறையும். உண்மை தான். ஆனால் மற்ற காரகத்துவங்களும், ஆதிபத்தியங்களும் வீணாகிவிடும். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. காரகத்துவம் என்பது ஒரு மனிதனின் கண், காது, மூக்கு,  வாய் போன்ற அவயவங்கள். இவைகள் மாறாதவை. ஆதிபத்தியம் என்பது சட்டை, வேட்டி, கண்ணாடி, தொப்பி போன்றவை ஆகும். லக்னத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். சுக்கிரனும், புதனும் அஸ்தாங்கதம் அடையாமல் இருந்து 9 ஐப் பார்க்க, அது தனுசு. பாக்கிய ஸ்தானம். 

மூன்று என்பது கால் மறைவு ஸ்தானம். நல்லதும், கெட்டதும் தரும் இடம். திடம், வீரம், பராக்கிரமம், தைரியம்,  இளைய சகோதரம், சகாயம் என்று இன்னும் எவ்வளவோ! மூன்றில் புதன் ஆட்சி. அவர் 6க்கும் உரியவர். ஆதி பத்திய விஷேசம் இல்லாதவர். 6க்குக் கேந்திரத்தில் இருக்கிறார். சுக்கிரன் தன, களத்திராதிபதி, பாவாத் பாவம். ஒரு கேந்திரத்திற்கு உரியவராகி பாதி கேந்திராதிபத்ய தோஷமும் உள்ளவராவார்.சூரியன் பஞ்சமாதிபதி, கோணாதிபதி, பூர்வ புண்யாதிபதி,  யோக கிரகம். சம ஸ்தானத்தில் இருந்து நட்பைப் பார்க்கிறார். யோகம் பேசும். 

குரு தனுசில் இருப்பதாகக் கொள்வோம். குரு பாக்கியத்தில் ஆட்சி,  மூலத் திரிகோணம். அவர் இருப்பை விட பார்வைக்கே வலிவு அதிகம். பலம் உள்ள பார்வை. சூரிய, சுக்கிர, புதன் சுபத்வம் அடைவார்கள். காரகத்துவங்களும் ஆதிபத்தியங்களும் கூடச் சிறக்கும். குரு விரயாதி பதியும்  கூட. பலம்  அடைந்ததால் விரயம் கட்டுக்குள் இருக்கும். 

தற்போது செவ்வாயும் தனுசில் இருப்பதாகக் கொள்வோம். எடுத்த எடுப்பில் குரு மங்கள யோகம். மித்திரர்கள். இரு கோணாதிபதிகள் சேர்க்கை. செவ்வாய்  கேந்திர கோணாதிபதி. பாக்கியாதிபதியை  விடப் பலன் அதிகம் தருபவர். யார் லக்னாதிபதியோ அவர் ஒரு முதல்  கோணத்திற்கும் முதல் கேந்திரத்திற்கும் உரியவர் ஆவார். இது ஒரு சிறப்பு. எந்தவொரு கிரகம் ஒரு கோணத்திற்கும் ஒரு கேந்திரத்துக்கும் உரியதாக வருகிறதோ அந்த கிரகம் ராஜ யோகம் செய்யும். செவ்வாயும், குருவும் ராஜ கிரகங்கள். மற்றும் ஒரு ராஜ கிரகமான சூரியனைப் பார்க்கிறார்கள். ராஜ கிரக சம்பந்தம். மற்றும் சுக்ரனையும், புதனையும் பார்ப்பார்கள். சுக்கிரனுக்கும், புதனுக்கும் இன்னும் சுப பலன்கள் கூடும். 

இப்போது சந்திரனும் தனுசில் இருப்பதாகக் கொள்வோம். உடனே கஜ கேசரி யோகம், குரு சந்திர யோகம், மற்றும் சந்திர மங்கள யோகம் அல்லது சசி மங்கள யோகம் ஏற்படும். சந்திரன் ஒற்றை வீட்டுக்காரர். ஆகவே கேந்திராதிபத்திய தோஷமும் குறைவு. இங்கு மூன்று பேருமே மித்திர்கள். ஒவ்வொருவராலும் மற்றவருக்கும் பலம். இடமும் முறையே ஆட்சி, நட்பு, சமம் என்ற அளவில் இருக்கிறது.  செவ்வாய் இங்கே உச்சாரோகணம் மற்றும் உச்சாபிலாஷா. மூலத்தில் இருப்பது சிறப்பு. ஏனெனில் கேது செவ்வாயைப்போலப் பலன்.

சந்திரன் பூராடத்தில் இருந்தாலும் சிறப்பே. சுக்கிரனும் சந்திரனும் பெண் கிரகங்கள். மேலும் அவர்கள் திக் பலம் அடையும் இடமும் 4. இது ஒரு ஒற்றுமை. குரு உத்திராடத்தில் இருந்தால் அது மித்ர சாரம். மிதுனத்தில் சூரியன் புனர்பூசத்தில் இருந்தால் அதுவும் மித்ர சாரம் தான். அது நட்சத்திரப் (சார) பரிவர்த்தனை. ஸ்தானப்பரிவர்த்தனையை விட நட்சத்திரப் பரிவர்த்தனை பலம் கூட. பலனும் அதிகம்.

 சுக்கிரன், செவ்வாய் சாரத்தில் இருப்பதும், புதன், ராகு சாரத்தில் இருப்பதும் பரவாயில்லை. சுக்கிரன் தன் ஸ்தானங்களுக்கு 2, 9 ல் இருப்பதும், புதன் தன் ஸ்தானங்களுக்குக் கேந்திரங்களில் இருப்பதும், சூரியன் தன் ஸ்தானத்திற்கு 11 ல் இருப்பதும் நல்லது தான். ஆனால் சந்திரன் மட்டும் தன் ஸ்தானத்திற்கு 6 ல் இருக்கிறார். அதுவும் பாக்கியத்தில், மித்ரர்களுடன். பெரிய குறை ஒன்றும் இல்லை. 

தற்போது சனி எங்கிருந்தால் நல்லது என்று பார்ப்போம். சனி துலாத்தில் உச்சம். பலன் பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் 3ம் பார்வையால், பாக்கியத்தையும், 7ம் பார்வையால் மேஷத்தையும், 10ம் பார்வையால், கடகத்தையும் பார்ப்பார். மேஷமும், கடகமும் வீணாகி விடும். 3 ம் பார்வையால் செவ்வாயும், சந்திரனும் வீணாகி விடுவார்கள். சனியை இடம் மாற்றி கும்பத்தில் வைத்தால் அது ஆட்சி மற்றும் மூலத் திரிகோண ஸ்தானம். ஆயினும்  பாதக ஸ்தானம். மேஷ, சிம்ம, விருச்சிகம்  கெட்டு விடும். கடும் பகை. சிறிது மாற்றி மகரத்தில் வைத்தால் கடகம் சிறிது   பாதிப்புடனும், மீன, துலாம் பாதிப்பு இல்லாமலும் தப்பித்துக் கொள்ளும். 

இப்போது ராகு, கேது எங்கே இருந்தால் நலம் என்று யோசித்தால் அவர்களுக்கு உகந்த இடம் உச்சம் தான். ராகு ரிஷபத்திலும், கேது விருச்சிகத்திலும் இருப்பதே சிறப்பு. 

நாம் எடுத்துக் கொண்ட விஷயம் மேஷ லக்னத்திற்கு இரண்டுக்குரிய சுக்கிரன் மறு இரண்டில் பாவாத்பாவம். இப்போது கிரகங்களை ஆராயலாம். 3 ல் மிதுனத்தில் ஒரு கோணாதிபதி, ஒரு கேந்திராதிபதி, ஒரு பணபராதிபதி, ஒரு ஆபோக்லீபாதிபதி இருக்கிறார்கள். அது போல 9ல், தனுசிலும் ஒரு கோணாதிபதி, இரு கேந்திராதிபதி, ஒரு பணபராதிபதி, ஒரு ஆபோக்லீபாதிபதிகளும் இருக்கிறார்கள். இங்கேயும் மூன்று சுபர்கள். 3 லும் இரு சுபர்கள். இங்கே இரு ராஜ கிரகங்கள். 3 லும் ஒரு ராஜ கிரகம். இப்போது பார்வையைப் பார்க்கலாம். 3 ல் இருப்பவர்கள் 9 ஐப் பார்ப்பதும், 9 ல் இருப்பவர்கள் 3 ஐப் பார்ப்பதும் சம சப்தமம். பரஸ்பரம் பகைப் பார்வையாயினும், அது சுபர் பார்வை. குரு கூடுதலாக மேஷத்தையும், சிம்மத்தையும் பார்ப்பார். நல்லது தான். செவ்வாய் கூடுதலாக மீனத்தையும், கடகத்தையும் பார்ப்பார். மீனம் விரயம், கடகம் நீசம். இரு வீட்டாரும் தன்னுடன் சுபத்துவத்தில். ஒன்றும் மோசம் இல்லை. 

சனியார் மீனத்தையும் கடகத்தையும் ஒரு சேரப்பார்ப்பார். மீனத்தை விடவும் கடகத்துக்குத் தொல்லை அதிகம். பத்தில் ஆட்சியானாலும் அவர் பாதகாதிபதியும்  தான். துலாம் உச்ச வீடு. தொல்லை ஒன்றும் இல்லை. உச்ச ராகு கேதுவுக்குப் பார்வை ஒன்றும் வெளியில் இல்லை. அவர்களை யாரும் பார்க்கவும் இல்லை. ராகு, கேதுக்களுக்குச் சாரம் என்று பார்த்தால் ராகுவுக்கு சூரிய சாரம் ஆபத்தே. ராகு, சந்திர சாரத்தில் இருந்தால் கேது சனி சாரத்தில் இருப்பார். இதுவும் மகா ஆபத்தே!  செவ்வாய் சாரம் என்று பார்த்தால் விருச்சிகத்தில் கேது, புத சாரம் ஏறுவார். அதுவே உசிதம். 

ஆகவே எனக்கு  இது ஒரு அபூர்வமான அமைப்பாகத் தோன்றுகிறது. இது எப்போது வரும் என்று பின்னோக்கி 60 வருடங்களும் முன்னோக்கி 30 வருடங்களும் சென்று பார்த்ததில் இந்த அமைப்பு வரவில்லை. ஆனால் என்றோ ஒரு நாள் வந்தே தீரும். அப்படி வந்தால் பல ஆச்சரியங்கள் நிகழும். இந்த அமைப்புக்குச் சமமாகவோ,  கூடுதலாகவோ வேறு ஒன்று இருப்பதும் துர்லபம் தான். இந்த அமைப்பு சிறக்க வேண்டும் என்றால் கிரகங்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குக் கூடிய வரை  உட்பட வேண்டும். 

அஸ்தாங்கதம், அதிசாரம், வக்ரம், ஸ்தம்பனம், வேதை மற்றும் கிரக யுத்தம் இவைகளால் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். பேதம், உல்லேகம், அம்சுமர்த்தனம், அபசவ்யம் மற்றும் யுத்தம் என்று ஐந்து விதமாகக் கிரக யுத்தம் இருக்கும். அதை விரிவாகப் பின்னர் சொல்வேன். இவைகளையெல்லாம் தாண்டித் தான் இந்த அமைப்பு பலன் தர வேண்டும். தரும் என்று நம்புவோம். இந்த அமைப்பு அதிக பட்சமாக இரண்டரை நாள் அமுலில் இருக்கும். சந்திரன் ஒரு ராசியில் இருக்கும் கால அளவு அது. அவர் மாறிவிட்டால் இந்த அமைப்பு  சிதைவுறும். 

அப்போது நாளுக்கு இரண்டு மணி நேரமாக வரும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் அனைவரும். பாக்கியவான்கள். அவர்களிலும் பூர்வ புண்ணியம் மிக்கவர்கள் மஹா பாக்கியவான்கள். அவர்களிலும் அதீத புண்ணியம் உள்ளோர் மகான்கள். அந்த மகான்களிலும் தெய்வ அனுக்கிரகத்தால் மேன்மையுற்றவர் உத்தம மஹான். அவரால் இந்த உலகம் உய்யும். பூவுலகம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும். புத்துயிரும் பெறும். அது எப்போதோ! 

ஆனால் இப்போதோ மற்ற பத்து பாவாத்பாவங்கள் காத்திருக்கின்றன. மேலும் மேஷ லக்னத்திற்கு இந்த அபூர்வமான அமைப்பின் விளைவுகளை அறிந்த போது மற்ற பாவங்களுக்கும் அறிய மனம் விழைகிறது. ஆனால் ஒரு உத்தமத்தைப் பார்த்ததால் ஒரு அதமத்தையும் பார்க்கலாம் என்று மனதிலும் தோன்றுகிறது. அது பெரிய விஷயமே இல்லை. 2019 டிசம்பர் மாதத்தில் கிரகங்களின் சேர்க்கை மற்றும்  பார்வைகளைக் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் ஏன் கொரோனா என்று தெரியவரும். அதை விடவா உலகத்துக்குப் பின்னடைவு? அடுத்து அது தான். ஜோதிடம் எனும் ஆழ் கடலின் கரையில் நின்று நான் அதிசயித்துக் கொண்டு இருந்தபோது ஆழ் கடல் தன் அபூர்வ முத்துக்களை என் முன்னே அள்ளிக் குவித்திருந்தது.

 அனைத்தும் ஓர்ந்து உணர்க !
 அன்புடன் அளித்தவர்: சக்திஸ்ரீ. BE ; M.A ; (ASTRO).

Saturday, January 2, 2021

பாவாத் பாவம்


ஒன்றாம் பாவம்: லக்னம்

ஒரு ஜாதகத்தில் முதல் பாவம் லக்னம். ஒன்றிற்கு உரியவர் ஒன்றிலேயே இருப்பதும், இரண்டுக்கு உரியவர் மறு இரண்டில் இருப்பதும், மூன்றிற்கு உரியவர் மறு மூன்றில் இருப்பதும், இப்படியே போய் ,12 க்கு உரியவர் மறு பன்னிரண்டில் இருப்பதும் தான் பாவாத்பாவம். இது உச்ச பலனுக்குச் சமம். குஜாதி ஐவர்கள் லக்னாதிபதிகளாக வந்து ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம், கேந்திரம் என்ற நிலைகளை அடைந்தால் அவர்களுக்குப் பஞ்ச மஹா புருஷ யோகம் ஏற்படும். முறையே சனியால் சசம், செவ்வாயால் ருசகம், புதனால் பத்ரம், குருவால் ஹம்ஸம், சுக்கிரனால் மாளவ்யம் உண்டாகும். பெயருக்கு ஏற்ற யோக பலன்கள். கடக, சிம்மங்களுக்கு செவ்வாயால் ராஜ யோகம் உண்டாகும். சிம்மமே மேலானது. கடகம் ஒரு படி கீழானது. ஏனெனில் செவ்வாய்க்கு கடகம் நீச வீடு.

இப்போது பாவாத் பாவம் பற்றிப் பார்ப்போம்.


முதலில் மேஷத்திலிருந்து ஆரம்பிக்கலாம்:


மேஷ லக்னத்தில் செவ்வாய் ஆட்சி. பஞ்ச மஹா புருஷ யோகம் வேறு. ருஷகம். 4ம் பார்வையால் கடகத்தைப் பார்க்கிறார். அந்த இடத்தின் ஆதி பத்திய விஷேஷங்கள் சிறக்கும். சந்திரனும் அங்கே இருந்தால் அவரின் காரகத்துவம் மேலோங்கும். மேலும் சந்திர கேந்திரத்தில், செவ்வாய் இருப்பதால் அவரின் பலமும் கூடும். கடகத்தைப் பார்ப்பதால் கல்வியில் பாண்டித்தியம் உண்டாகும். ஏனெனில் முருகன் ஞான பண்டிதன். செவ்வாயின் அதி தேவதை சுப்பிரமணியர். வீடு, மனை, வாகனம், நல்ல நண்பர்கள், சுப பந்துக்கள் அமையும். கடகத்தில் சந்திரன் இருந்தால் அது "காரகோ பாவ நாஸ்தி". மாத்ரு காரகன் மாத்ரு ஸ்தானத்தில் அமரக்கூடாது. பாவம் நசிக்கும். ஆயினும் யோக பலமுள்ள செவ்வாய் பார்ப்பதால் ஆபத்து இல்லை. செவ்வாயால் திடமான சரீரமும்,சந்திரனால் முக வசீகரமும் ஜாதகருக்கு அமையும்.

ஒரு வேளை சந்திரன் விருச்சிகத்தில் நீசம் பெற்றிருந்தாலும் செவ்வாய் ஆட்சி பெறுவதால் நீசம் பங்கமாகி சந்திரனுக்கு நீசபங்க ராஜ யோகம் உண்டாகும். தாய்க்கும் நலம். தாயாராலும் நலம். காரணம் சந்திரன் கடகத்திற்கு 5ல், கோணத்தில், யோகத்தில். செவ்வாய் துலாத்தைப் பார்க்கிறார். அது 7ம் வீடு. திருமணம், கூட்டுத் தொழில், மாரகம் இவைகளைச்சொல்லும். சுக்கிரன் இரட்டை மாரகன். மாரகன் தன் ஸ்தானத்தில், 7 ல். மாரகம் குறைவு படும். களத்திர காரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில்"காரகோ பாவ நாஸ்தி". பாவம் நசித்து விடும். கூட்டுத்தொழில் தொல்லை தரும். சித்திரை சாரத்தில் இருந்தால் நசிவு குறையும். சுக்கிரனாலும் செவ்வாய்க்கும் பலம் குறையும். கேது, சூரிய சாரங்கள் நலம் பயக்கும், செவ்வாய் தன் 8ம் பார்வையால் விருச்சிகத்தைப் பார்க்கிறார்.அதுவும் அவர் ஆட்சி வீடு. அஷ்டமாதிபதி ஆட்சி, யோகம் கொண்டு தன் வீட்டைத் தானே பார்க்கிறார். அஷ்டமாதிபதிபத்திய தோஷம் பெருமளவில் குறையும். அவர் ஆயுள் ஸ்தானாதிபதியும் கூட. ஆயுள் தீர்க்கம். அஷ்டமாதி பதியின் ஒரு சிறப்பை வேறு ஒரு இடத்தில் சொல்வேன்.


அன்புடன் அளித்தவர் சக்தி ஸ்ரீ

MA (Astro);B.E;

Friday, January 1, 2021

கிரகங்களின் உச்ச பலன்களும் விசித்திரங்களும்!

கிரகங்கள் தம் உச்ச ராசியில் அதிக பட்ச சுப பலன்களைத் தருகின்றன என்பது பொது. அதி உச்சம் தாண்டினால் உச்ச பலன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:


முதலில் சூரியன்:

மேஷத்தில் உச்சம்.10*யில் அதி உச்சம். பலனை எதிர் பார்ப்பவர்களுக்கு மிஞ்சுவது ஏமாற்றமே. ஏனெனில் மேஷத்தின் முதல் திரேக்காணம் விஷத் திரேக்காணம் அது 10*வரை. ஆனால் மேஷத்திற்கு முந்தைய ராசியான மீனத்தில் சூரியன் இருக்கும் போது உச்சாபிலாஷா என்ற நிலை ஏற்படும். பொதுவாக முக்கால் வாசி உச்ச பலனை மீனத்திலேயே தந்து விடுவார். இப்படி எல்லா கிரகங்களுக்கும் உச்சாபிலாஷா ஏற்படும். மீனத்தில் பூரட்டாதி 4ம் பாதமும், ரேவதியின் 4 பாதங்களும் உகந்தவை. பலன்களும் குருவையும் புதனையும் சார்ந்தே இருக்கும்.

இனி சந்திரன்:

அவர் ரிஷபத்தில் 3*யில் அதி உச்சம். உச்சாபிலாஷாவின்படி மேஷத்தில் வரும் போது பலன்.அஸ்வினி, பரணியைத் தவிர்த்தால் கார்த்திகை 1ல் முக்கால் வாசியும் கார்த்திகை 2ல் கால் வாசியும் பலன் கிடைக்கும். அதுவும் சூரியனைச் சார்ந்து.

அடுத்தது குரு:

கடகத்தில் 5*யில் அதி உச்சம். உச்சாபிலாஷாவின்படி மிதுனத்தில் செவ்வாய், ராகு, குரு சாரம் நன்றாக இருக்கும். அதிலும் ராகு சாரம் விஷேசம். ஏனெனில் ராகு, குரு சேர்க்கை குரு சண்டாள யோகம் தரும். குருவின் சுப பலன்கள் ராகுவால் வழங்கப்படும். முக்கால் வாசிப் பலன்கள் மிதுனத்திலும், கால்வாசிப் பலன்கள் புனர்பூசம் 4ம் பாதத்திலும் கிடைத்துவிடும்.

அடுத்ததாக புதன்:

புதன் கன்னியில் 15*யில் அதி  உ ச்சம். சிம்மத்தில் கேது,சுக்ர, சூரிய சாரங்கள். சுக்ர சாரம் அதி மித்ர சாரம்.மிளிரும்.சூரிய சாரமும் நட்பே. ஆனால் கேது சாரம் வித்தியாசமானது. புதன் வித்யா காரகன். கேது ஞான காரகன். வித்யை முதிர்ந்தால் ஞானம். ஞானம் முதிர்ந்தால் மோனம்.மோனம் என்பது ஞான வரம்பு. விநாயகர் மோனப்பொருள். புதனும் கேதுவும் வித்யா விஷயத்தில் ஒன்று. புதன் மகத்திலிருந்து வெளியேறும் போது ஞானக் கடலில் தோய்ந்து வெளி வருவார். இது வருடா வருடம் கூடும். ஆனால் அதற்கு கேது 3, 6, 10, 11ல் இருந்தாக வேண்டும். விருச்சிகமும் சரியே. முக்கால் வாசிப் பலன்கள் சிம்மத்திலும் கால் வாசிப் பலன்கள் கன்னியின் 2ம் திரேக்காணத்திலும் நடந்து விடும். ஏனெனில் முதல் திரேக்காணம் விஷத் திரேக்காணம்.

அடுத்தது சனி:

சனி துலாத்தில் 20* யில் அதி  உச்சம். உச்சாபிலாஷாவின்படி கன்னியில் சூரிய, சந்திர, செவ்வாய் சாரங்கள் அனைத்தும் பகையே. துலாத்தின் இரண்டாம் திரேக்காணம் விஷத் திரேக்காணம். அது ராகு சாரம். ராகுவால் சில கெடுதலான நன்மைகள் உண்டு. அதாவது ஒருவர் தன் காசில் நண்பருக்குச் சாராயம்  வாங்கிக் கொடுப்பது போல. மொத்தத்தில் சனி உச்சத்தால் எந்த லாபமும் இல்லை.

அடுத்தது செவ்வாய்:

செவ்வாய்க்கு 28*யில் மகரத்தில் அதி உச்சம். உச்சாபிலாஷாவின்படி மூலம் கேது சாரம். கேது, செவ்வாய் போல பலன். பூராடம் சுக்ர சாரம். சுக்ரன் சம உறவுடையவன். உத்திராடம் சூரிய சாரம். அதி மித்ர சாரம். மகரத்தில் செவ்வாய் உச்சம், வக்ரம், ஸ்தம்பனம் என்ற மூன்று நிலைகளில் எட்டு மாதங்கள் வரை இருந்திருக்கிறது. உச்சத்தில் சுப பலன்.வக்ரத்தில் செவ்வாய் ராஜா போல இருப்பார். ஸ்தம்பனத் திலும் (ஆடாமல், அசையாமல்) சில நாட்கள் தன் சுப பலத்தைத் தக்க வைத்துக் கொள்வார். தன் சுய சாரத்தில் அதி உச்சம் பெறும் ஒரே கிரகம் செவ்வாய் தான். செவ்வாய் உச்சம், அதி உச்சம் பெற்ற ஜாதகர்கள் உன்னத நிலையை அடைந்ததைப் பார்த்திருக்கிறேன்.

அடுத்தது சுக்ரன்:

 சுக்ரன் மீனத்தில் 27*யில் அதி உச்சம். உச்சாபிலாஷாவின்படி செவ்வாய், ராகு சாரங்கள் வீண் போகாது. குரு சாரம் சுமார். மீனத்தின் கால் வாசிப் பலன்களில் கொஞ்சம் சனி புத சாரத்தால் வீணாகி விடும். ஏனெனில் மீனத்தின் 2ம் திரேக்காணம் விஷத் திரேக்காணம்.

கடைசியாக ராகு & கேது:

ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிகத்திலும் உச்சம். இதில் மாற்றுக் கருத்து உண்டு. ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதி உச்சமென்பதும் இல்லை. உச்சாபிலாஷாவும் இல்லை. பொதுவாக ராகு சனியைப் போலவும் கேது செவ்வாயைப் போலவும் பலன்கள் தரும். எப்போதும் வக்ரம். அதீத பலம். தான் நின்ற ராசி  நாதன் போலவும், தன்னுடன் சேர்ந்தவர் போலவும், தன்னைப் பார்த்தவர் போலவும், தான் நின்ற சார நாதன் போலவும், பலன்கள் தருவர். தன் உச்ச ராசியில் தான் நின்றாலும் மற்ற எவர் நின்றாலும் சாரத்திற்கு ஏற்பவே பலன்.

பொதுவாக:

அதி உச்ச பாகையில் கிரகங்கள் பலன்கள் ஒன்றும் தராது. அதன் முந்தைய பாகை வரை தான் அதி உச்ச பலன். உச்ச பலன் நன்கு பெறுவதற்கு உச்ச கிரகங்களின் சார நாதர்கள் நல்ல இடங்களில் பலத்துடன் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் சம உறவிலாவது அமைய வேண்டும். அனைத்தும் தேர்ந்து தெளிக.! 

அன்புடன் அளித்தவர் சக்தி ஸ்ரீ

 MA (Astro);B.E;

இனி மேல்: பாவாத் பாவம்.

Friday, December 18, 2020

வேலையா, தொழிலா, அல்லது இரண்டுமே வா?!!

 ஓம் மஹா கணபதே நமோ நமஹ. ஸுப்ரஹ்மண்யாய நமோ நமஹ.
லலிதா பரமேஸ்வர்யை நமோ நமஹ

இன்று 18.12.2020, மார்கழியில் வளர்பிறை, பஞ்சமி, வெள்ளிக்கிழமை, புதன் ஹோரையில் ஜோதிடத்தில் 48 வருட அனுபவமுள்ள ஒருவரின் படிப்பினைகள் வெளியாகின்றன. புண்யவான்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

 வாழ்க்கைக்குத் தேவை பணம். அது கிடைப்பது வேலை அல்லது தொழில் மூலம். அது அமைய: 

கீழ்க்கண்ட மந்திரத்தைக் கிழக்குப் பார்க்க நின்று கொண்டு சூரியனை நோக்கித் தினமும் பகல் 12 மணிக்குப் பாராயணம் செய்தால் பலன் நிச்சயம்.(11தடவைகள்).

சூரியனின் பன்னிரு திருநாமங்கள்:

மித்ராய நமஹ

ரவயே நமஹ

ஸூர்யாய நமஹ

பானவே நமஹ

ககாய நமஹ

பூஷ்ணே நமஹ

ஹிரண்ய கர்ப்பாய நமஹ

மரீச்சயே நமஹ

ஆதித்யாய நமஹ

ஸவித்ரே நமஹ

அர்க்காய நமஹ

பாஸ்கராய நமஹ

ஜலாபிமான தேவதைகள்:

தேவ ஸூவரி தேவி அவர்த்திம் அபஹித.

அதி தேவதை: 

ஸும்ருடீகா ஸரஸ்வத்யை நமோ நமஹ.   

பிரத்யதி தேவதை: 

ஸுப்ரஹ்மண்யோம், ஸுப்ரஹ்மண்யோம், ஸுப்ரஹ்மண்யோம்.

வேலை அல்லது தொழில் அல்லது  இரண்டும் கிடைக்க அம்பாள்  ஆசீர்வாதத்துடன்,

அன்புடன் சக்திஸ்ரீ.

M.A(Astro).

ஒன்பது கிரக சம்பந்தமும், கிரக அஸ்தாங்கதமும், கிரக யுத்தமும், கொரோனாவும்.

  2019 - மார்ச்7-5 மணி 52 நிமிடம். சனி தனுசில் இருந்தபோது ‌‍‍‍‍‍ ‌கேதுப் பிரவேசம்.‌ தனுசில் இரு கிரகங்கள். சனி கேதுவின் பிடியில் வந்தார்.  ...